sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கூவனுாரில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

/

கூவனுாரில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

கூவனுாரில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

கூவனுாரில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு


ADDED : நவ 11, 2025 11:33 PM

Google News

ADDED : நவ 11, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த கூவனுாரில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு அரசு இடத்தை கல்வித்துறைக்கு மாற்றம் செய்யும் நடவடிக்கை குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா நேரில் ஆய்வு செய்தார்.

திருக்கோவிலுார் அடுத்த கூவனுார் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது.

இப்பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், பள்ளி வளாகத்தில் இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தை கல்வித்துறைக்கு பெயர் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் வருவாய் துறைக்கு மனு அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் கல்வித்துறைக்கு இடத்தை மாற்றம் செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் இடத்தை ஆய்வு செய்தார். ஆய்வின்போது தாசில்தார் சரவணன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

கிராம மக்கள் இதனால் ஏற்படும் பயன்கள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் விளக்கி கூறினர்.






      Dinamalar
      Follow us