sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வாக்காளர் திருத்த பணி கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

/

வாக்காளர் திருத்த பணி கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

வாக்காளர் திருத்த பணி கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

வாக்காளர் திருத்த பணி கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 12, 2025 03:31 AM

Google News

ADDED : நவ 12, 2025 03:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். நகர செயலாளர் சுப்ராயலு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் வசந்தம் கார்த்திகேயன் பேசியதாவது; வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கொண்டு வந்து பா.ஜ., அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் கமிஷனை வன்மையாக கண்டிக்கிறோம். சங்கிகளின் அடிமையாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி மாறிவிட்டார். வரும் 2026 தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதியிலும், தமிழகத்தில் 200 தொகுதிகளிலும் தி.மு.க., கட்டாயம் வெற்றி பெறும் என பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மலையரசன் எம்.பி.,மணிக்கண்ணன் எம்.எல்.ஏ.,, மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம், காமராஜ், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் காங்., ஜெய்கணேஷ், வி.சி., மதியழகன், ம.தி.மு.க., ஜெய்சங்கர், இந்திய கம்யூ.,ராமசாமி, மா.கம்யூ.,ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us