ADDED : ஆக 16, 2026 07:31 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கல்லுாரி மாணவர அமுதன் கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஒருங்கிணைந்த தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன், மலையரசன் எம்.பி., வசந்தவேல் எம்.எல்.ஏ., தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் கருணாகரன் முன்னிலை வகித்தனர். நகர கவுன்சிலர் பாபு வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், கோயம்புத்துார் தனியார் கல்லுாரியில் இறந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமுதன் மரணத்திற்கு நீதி கேட்டும், போதைப்பொருட்களை தடுக்க தவறிய த.வெ.க., அரசை கண்டித்தும் பேசினர்.
முன்னாள் எம்.எல்.ஏ., அங்கையற்கண்ணி, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், மாவட்ட அவைத் தலைவர் ராமமூர்த்தி, நகர செயலாளர் ஜெய்கணேஷ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், அண்ணாதுரை, காமராஜ்.
பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன், ராஜி, நகர சேர்மன் திருநாவுக்கரசு, துணை சேர்மன் ஷமீம்பானு அபுபக்கர், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, சத்தியமூர்த்தி, அன்புமணிமாறன், பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், அய்யனார், கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், வைத்தியநாதன், ராஜவேல், முருகன், அசோக்குமார்.
ஒன்றிய சேர்மன்கள் வடிவுக்கரசி சாமி சுப்ரமணியன், தாமோதரன், பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணைச் சேர்மன் சங்கர், இளைஞரணி நிர்வாகிகள் அருள், உதயா, ஜெய்சங்கர், சக்திவேல் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
