/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வரதட்சணை கொடுமை: 5 பேர் மீது வழக்கு
/
வரதட்சணை கொடுமை: 5 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 28, 2025 02:12 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கணவன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த திம்மலை கிராமத்தை சேர்ந்தவர் அன்புதுரை, 27; இவரது மனைவி சினேகா, 20; இவர்களுக்கு பிப்., 3ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 5 சவரன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக வழங்கினர். இந்நிலையில், கணவர் அன்புதுரை, மாமனார் அண்ணாதுரை, மாமியார் வசந்தா உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து, மேலும் 5 சவரன் தங்க நகை கேட்டு அடித்து துன்புறுத்தியதாக, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் சினேகா புகார் அளித்தார். அதன்பேரில், கணவர் அன்புதுரை உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.