/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
/
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
ADDED : நவ 03, 2024 11:19 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மின் வாரிய கோட்ட அலுவலகங்களில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.
மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலக செய்திகுறிப்பு:
கள்ளக்குறிச்சி மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் கார்த்திகேயன் தலைமையில் மாதம் தோறும் செவ்வாய் கிழமைகளில் மின்வாரிய கோட்ட அலுவலகங்களில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி கோட்டத்தில் நாளை 5ம் தேதி, திருக்கோவிலுார் கோட்டத்தில் 12ம் தேதியும் நடக்கிறது. சங்கராபுரம் கோட்டத்தில் 19ம் தேதி, உளுந்துார்பேட்டை கோட்டத்தில் 26ம் தேதி நடக்கிறது. அப்பகுதி பொதுமக்கள் தங்களது கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை அந்தந்த மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.