/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம்
/
பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம்
ADDED : டிச 12, 2024 07:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம் நடந்தது.கள்ளக்குறிச்சி-கச்சிராயபாளையம் சாலை அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு பெருமாள், தாயார் சுவாமிகளுக்கு அலங்கார திருமஞ்சனம் செய்து வைக்கப்பட்டது.
சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கோவில் உட்பிரகாரம் வலம் வந்தபின், சேவை, சாற்றுமுறை, ஆராதனை நடந்தது. பின், சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர்.