/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நடந்து சென்றவர் மீது பைக் மோதி விபத்து பைக் ஓட்டிய முதியவர் பலி
/
நடந்து சென்றவர் மீது பைக் மோதி விபத்து பைக் ஓட்டிய முதியவர் பலி
நடந்து சென்றவர் மீது பைக் மோதி விபத்து பைக் ஓட்டிய முதியவர் பலி
நடந்து சென்றவர் மீது பைக் மோதி விபத்து பைக் ஓட்டிய முதியவர் பலி
ADDED : நவ 05, 2025 07:48 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே நடந்து சென்றவர் மீது பைக் மோதிய விபத்தில், பைக் ஓட்டி வந்த முதியவர் இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லுார் அடுத்த கருவேப்பிலைபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வடக்குமலையான், 50; இவர் கடந்த 31ம் தேதி இரவு 7.30 மணிக்கு, உளுந்துார்பேட்டை அடுத்த மடப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார்.
அப்போது அவ்வழியாக விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லுார் அடுத்த கருவேப்பிலைபாளையம் பகுதியைச் சேர்ந்த வீரமுத்து, 65; ஓட்டிச் சென்ற பைக், நடந்துச்சென்ற வடக்குமலையான் மீது மோதியது. இதில் வடக்குமலையான், வீரமுத்து ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு அங்கு சிகிச்சை பலனின்றி வீரமுத்து இறந்தார்.
இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

