ADDED : செப் 02, 2025 10:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்; கச்சிராயபாளையம் அருகே கார் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார்.
கச்சிராயபாளையம் அடுத்த சர்க்கரை ஆலை அருகில் வசிப்பவர் கொடியன், 75; இவர் நேற்று காலை 6:00 மணிக்கு தனது வீட்டின் எதிரே உள்ள பைப்பில் தண்ணீர் பிடித்துக்கொண்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது கள்ளக்குறிச்சி நோக்கி சிதம்பரம் வட்டம், புவனகிரி பகுதியை சேர்ந்த சிவலிங்கம் மகன் கருணா என்பவர் ஓட்டி வந்த கார் கொடியன் மீது மோதியது. இதில் கொடியன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கச்சிராயாபாளையம் போலீசார் கொடியனின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.