ADDED : ஜன 08, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம் : வாணாபுரம் தாலுகா ரோடு புதுார் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் வரதன், 65; விவசாயி.
இவர் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு தியாதுருகம் பஸ் நிலையம் எதிரே சாலையை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பஸ் வரதன் மீது மோதியது.
படுகாயம் அடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவு 9:00 மணிக்கு அவர் இறந்தார்.
புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.