/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மயங்கி விழுந்து முதியவர் சாவு
/
மயங்கி விழுந்து முதியவர் சாவு
ADDED : டிச 25, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சியில் சாலையில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த ஊராங்கன்னி சேர்ந்தவர் ஆனந்தவேல், 71; இவ ருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் பகல் 2 மணியளவில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
வழியில் குளத்துமேட்டு தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அருகே சென்றபோது ஆனந்தவேல் மயங்கி விழுந்து இறந்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.