ADDED : ஜன 22, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலூர்; பைக் மோதியதில் படுகாயமடைந்த முதியவர் இறந்தார்.
திருக்கோவிலுார் அடுத்த வீரட்டகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 60; இவர் நேற்று முன்தினம் இரவு ஆவிகொளப்பாக்கத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, பின்னால் வந்த பைக் அவர் மீது மோதியது.
அதில் படுகாயமடைந்த முதியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
திருக்கோவிலூர் போலீசார் விபத்தை ஏற்படுத்திய மணம்பூண்டியைச் சேர்ந்த சேகர் மகன் தினேஷ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.