ADDED : செப் 09, 2025 09:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே கார் மோதி உயிரிழந்த முதியவரின் உடல் அடையாளம் காணப்பட்டது.
உளுந்துார்பேட்டை அடுத்த மடப்பட்டு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், 60; வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் நேற்று முன்தினம் காலை சாலையை கடந்தார். அவ்வழியாக வந்த கார் முதியவர் மீது மோதியதல் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்தார். இது குறித்து மடப்பட்டு வி.ஏ.ஓ., சவரிநாதன் அளித்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இறந்த முதியவர் கடலுார் மாவட்டம், மேலிருப்பு கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் குப்புசாமி, 60; என தெரிய வந்தது. இதையெடுத்து போலீசார் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.