/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மின்மோட்டார் திருட்டு; மர்ம ஆசாமிக்கு வலை
/
மின்மோட்டார் திருட்டு; மர்ம ஆசாமிக்கு வலை
ADDED : ஜூலை 24, 2025 10:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே விவசாய மின்மோட்டார் மற்றும் ஒயரை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராரபுரம் அடுத்த பொய்குணம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி திலகவதி, 52; இவர், கடந்த 20ம் தேதி தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு மோட்டாரை நிறுத்தி விட்டு வந்துள்ளார்.
மறுநாள் காலை 7:00 மணிக்கு சென்று பார்த்தபோது 5 எச்.பி., மின்மோட்டார், 21 மீட்டர் ஒயர் மற்றும் கயிறு உள்ளிட்ட 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடு போனது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.