ADDED : ஜூலை 19, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம் :கச்சிராயபாளையம் அருகே மின் ஒயர் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன், 40; இவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று முன்தினம் இரவு மின் ஒயர் திருடு போனது.
புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் அதே நிலத்தில் வேலை செய்யும் பரிகம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 44; திருடியது தெரியவந்தது. உடன் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.