/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏணியில் இருந்து விழுந்து எலக்ட்ரீஷியன் பலி
/
ஏணியில் இருந்து விழுந்து எலக்ட்ரீஷியன் பலி
ADDED : செப் 28, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : மணலுார்பேட்டை அருகே ஏணியில் இருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் இறந்தார்.
பிள்ளையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 50; எலக்ட்ரீஷியன். அதே பகுதியில்சிவக்குமார் என்பவரின் புதிய வீட்டில் நேற்று முன்தினம் மாலை ஒயரிங் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்பாது எதிர்பாராதவிதமாக ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.