ADDED : ஏப் 07, 2025 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரத்தில், மின் நுகர்வோர் குறை தீர்ப்பு முகாம், செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது.
உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் ரகுராமன், ஒன்றிய சேர்மன் திலகவதி, ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நகர செயலாளர் துரை முன்னிலை வகித்தனர். உதவி செயற்பொறியாளர் திருமலைவாசன் வரவேற்றார்.
இதில், 118 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. உதவி செயற்பொறியாளர்கள் வேலுமணி, கோமதி செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.