/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பங்காரம் லஷ்மி கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா
/
பங்காரம் லஷ்மி கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 10, 2025 11:39 PM

கள்ளக்குறிச்சி: பங்காரம் லஷ்மி கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார்.
செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை முதல்வர் சசிகலா வரவேற்றார். விழாவில், கல்லுாரி வளாகத்தில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர்கள் பழனியம்மாள், பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் உரியடித்தல், கோலப்போட்டி மற்றும் இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர். துணை முதல்வர் சக்திவேல் நன்றி கூறினார்.