sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கோமுகி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்

/

கோமுகி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்

கோமுகி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்

கோமுகி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்


ADDED : அக் 23, 2024 11:14 PM

Google News

ADDED : அக் 23, 2024 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கோமுகி அணையிலிருந்து வினாடிக்கு 300 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கச்சிராயபாளையம் அடுத்த கல்வராயன் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது கோமுகி அணை. இந்த அணை (560 மில்லியன் கன அடி) 46 அடி முழு கொள்ளவு கொண்டுள்ளது.

நேற்று முன்தினம் மாலை கல்வராயன் மலை, கச்சிராயபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

இதனால் கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் பொட்டியம், கல்படை, மல்லிகைப்பாடி ஆகிய ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதனால் அணைக்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் நீர் வரத்துவங்கியது.

இதனை தொடர்ந்து அணையின் நீர் மட்டம் (520 மில்லியன் கன அடி) 44 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து கோமுகி ஆறு வழியாக நேற்று முன்தினம் மாலை 3:00 மணி முதல் வரத்து நீர் முழுவதும் வினாடிக்கு 300 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us