/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரத்தில் கண் பரிசோதனை முகாம்
/
சங்கராபுரத்தில் கண் பரிசோதனை முகாம்
ADDED : அக் 19, 2024 04:45 AM
சங்கராபுரம், : சங்கராபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
சங்கராபுரம் ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவ மையம் சார்பில் டி.எம்.பள்ளியில் நடந்த முகாமிற்கு, ரோட்டரி தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் சங்கர் வரவேற்றார். முன்னாள் தலைவர்கள் முத்துகருப்பன், சீனிவாசன், முன்னாள் துணை ஆளுனர்கள் ராஜேந்திரன், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். முகாமை ரவிசங்கர் தொடங்கி வைத்தார்.
கோவை சங்கரா கண் மருத்துவ மையத்தைச் சேர்ந்த கண் டாக்டர் குழுவினர் 400 பேருக்கு கண்களை பரிசோதனை செய்தனர். 150 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு கோவை அழைத்துச் செல்லப்பட்டனர்.
முகாமில் மகேந்திரன், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.