/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
28ம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
/
28ம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
ADDED : மார் 25, 2025 04:28 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் 28ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2025 மார்ச் மாதத்திற்கான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் 28ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்குகிறார்.
கூட்டத்தில். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த அனைத்து துறை அலுவலர்கள் விவசாயிகளின் குறைகள்,கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
எனவே, மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொதுகோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக அளித்து பயனடையலாம்.இவ்வாறுசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.