/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் 31ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
கள்ளக்குறிச்சியில் 31ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கள்ளக்குறிச்சியில் 31ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கள்ளக்குறிச்சியில் 31ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : ஜன 29, 2025 06:44 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வரும் 31ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வரும் 31ம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் வேளாண் துறை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி, வங்கியாளர்கள் உட்பட பல்வேறு அரசு துறைகளை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகள் தெரிவிக்கும் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேசலாம். மேலும், தனிநபர்கள் தங்களது குறைகளை மனுவாக கொடுக்கலாம்.