sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாநில பயிர் விளைச்சல் போட்டி பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

/

மாநில பயிர் விளைச்சல் போட்டி பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

மாநில பயிர் விளைச்சல் போட்டி பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

மாநில பயிர் விளைச்சல் போட்டி பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : நவ 07, 2025 11:14 PM

Google News

ADDED : நவ 07, 2025 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் விவசாயிகள் பங்கேற்று பரிசுத்தொகை பெறலாம் என வேளாண் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சத்தியமூர்த்தி செய்திக்குறிப்பு;

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான மாநில அளவிலான பயிர்விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது மற்றும் சிறப்பு பரிசாக ரூ.5 லட்சம், ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம் ஆகியவை தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ளன.

இப்போட்டியில் பங்கு பெறும் விவசாயிகள், குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி செய்பவராக இருக்க வேண்டும். அத்துடன் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி செய்த முன்னோடி விவசாயியாகவும் இருக்க வேண்டும். நில உரிமைதாரர்கள் மற்றும் குத்தகைதாரர்களும் பயிர்விளைச்சல் போட்டியில் கலந்துகொள்ள தகுதியுடையவர்கள்.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அறிவிக்கை செய்யப்பட்ட நெல் ரகங்களை மட்டுமே பயிர் செய்திருக்க வேண்டும். பதிவுக்கட்டணம் ரூ.150 உடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநரிடம் செலுத்தி பதிவு செய்திட வேண்டும்.

விண்ணப்பத்துடன் நெல் பயிரிடப்பட்டுள்ள பரப்பின் சிட்டா, அடங்கல் மற்றும் நில வரைபடம் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us