ADDED : ஜன 24, 2025 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபரம் அருகே காணாமல் போன கல்லுரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த ஜவுளிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது 19 வயது மகள் தலைவாசலில் உள்ள தனியார் கல்லுரியில் பி.சி.ஏ., இரண்டாமாண்டு படித்து வந்தார்.
கடந்த 10 ம் தேதி இரவு வீட்டில் துாங்கிகொண்டிருந்தவரை காணவில்லை. குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன கல்லுாரி மாணவியை தேடிவருகின்றனர்.

