ADDED : ஆக 07, 2025 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் பிரியா,18; பிளஸ் 2 முடித்து விட்டு, சென்னை சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த 2ம் தேதி வீட்டிற்கு வருவதாக மொபைல்போன் மூலம் குடும்பத்தினரிடம் பிரியா தெரிவித்தார்.
ஆனால் அன்று இரவு பிரியா வீடு வரவில்லை. உடன் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், காணாமல் போன மகள் பிரியாவை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது தந்தை வெங்கடேசன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.