ADDED : அக் 01, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி நகர பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் ஹரிஷ்,14; இவர் தச்சூரில் உள்ள தனியார் ஆக்ஸாலிஸ் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு, எம்.ஆர்.என்., நகரில் உள்ள தனியார் டியூசன் சென்டருக்கு சென்ற ஹரிஷ், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால், காணாமல்போன மகன் ஹரிஷினை கண்டுபிடித்து தரக்கோரி, இவரது தந்தை சுப்ரமணி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.