ADDED : பிப் 16, 2025 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் : மருந்து குடித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ரிஷிவந்தியம் அடுத்த கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி பாஞ்சாலை,25; இவர், அடிக்கடி வயிற்று வலியால் அவதியடைந்தார்.
இதனால், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வயலுக்குச் சென்று பருத்தி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
உடன், குடும்பத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று மாலை அவர் இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீ சார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.