நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: வயிற்று வலி தாங்காமல் பூச்சி மருந்து குடித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கச்சிராயபாளையம் அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி யன் மனைவி தனலட்சுமி, 35; திருமணமாகி 15 ஆண் டாகிறது. குழந்தை இல்லை.
தனலட்சுமிக்கு வயிற்றில் கட்டி இருந்ததால், அதற்கு தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 4ம் தேதி தனலட்சுமிக்கு வயிற்று வலி அதிகமானதால், விரக்கதியடைந்த அவர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன் அவரை, குடும்பத்தார் மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை இறந்தார்.
கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

