நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; வரஞ்சரம் அடுத்த நின்னையூரை சேர்ந்தவர் அய்யப்பன். விவசாயி கூலித்தொழிலாளி. இவரது மனைவி லதா, 37; அய்யப்பன் மது அருந்தும் பழக்கத்தால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. கடந்த ஜூலை 27ம் தேதி வழக்கம்போல் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. பின்பு, அய்யப்பன் அங்குள்ள கடைக்கு சென்று திரும்பி வந்தபோது, மனைவி லதா துாக்கில் தொங்கினார்.
உடனடியாக லதாவை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லதா நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.