sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உயிரிழந்த போலீசாரின் குடும்பத்திற்கு ரூ.23.24 லட்சம் நிதி உதவி வழங்கல்

/

உயிரிழந்த போலீசாரின் குடும்பத்திற்கு ரூ.23.24 லட்சம் நிதி உதவி வழங்கல்

உயிரிழந்த போலீசாரின் குடும்பத்திற்கு ரூ.23.24 லட்சம் நிதி உதவி வழங்கல்

உயிரிழந்த போலீசாரின் குடும்பத்திற்கு ரூ.23.24 லட்சம் நிதி உதவி வழங்கல்


ADDED : ஜன 03, 2025 06:15 AM

Google News

ADDED : ஜன 03, 2025 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில், விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.23.24 நிதியை எஸ்.பி., வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை அடுத்த கூவாடு கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூன் மகன் சின்னதுரை,31; சென்னையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்தார். கடந்த 2024ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் சின்னதுரை உயிரிழந்தார். உயிரிழந்த சின்னதுரைக்கு 2 வயதில் சவிதா என்ற மகள் உள்ளார். இதனால் மிகுந்த சிரமத்தில் இருந்த அவரது குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில், சின்னதுரையுடன் பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்றிணைந்து காக்கும் உறவுகள் குழு மூலம் நிதி உதவி திரட்டினர்.

அதன்படி, கடந்த 2017ம் ஆண்டு பணியில் சேர்ந்து, 38 மாவட்டங்களிலும் பணிபுரியும் 6,837 காவலர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை வழங்கினர். இதன் மூலம் ரூ.23 லட்சத்து 24 ஆயிரத்து 950 நிதி உதவி தொகை பெறப்பட்டது. கள்ளக்குறிச்சி எஸ்.பி., ரஜத்சதுர்வேதி நிதி உதவியை இறந்த சின்னதுரையின் தந்தை அர்ஜூனிடம் வழங்கி ஆறுதல் கூறினார். நிதி உதவியாக பெறப்பட்ட பணம் அவரது குடும்பத்தில் உள்ள அனைவரது அஞ்சல் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்தப்பட்டது.

அப்போது, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us