/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தீ விபத்தில் பாதிப்பு நிவாரண உதவி
/
தீ விபத்தில் பாதிப்பு நிவாரண உதவி
ADDED : பிப் 06, 2026 07:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்: சின்னமாம்பட்டு கிராமத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒன்றிய மாவட்ட சேர்மன் நிவாரண உதவி வழங்கினார்.
தியாகதுருகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சுசீலாவின் கூரை வீடு எதிர்பாராத விதமாக தீ பற்றி எரிந்து சேதமடைந்தது.
தகவல் அறிந்தவுடன் தியாகதுருகம் ஒன்றிய துணை சேர்மன் நெடுஞ்செழியன் நேரில் சென்று வீடு இழந்த சுசிலா குடும்பத்திற்கு அரிசி, மளிகை பொருட்கள், துணி மற்றும் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
தி.மு.க. மாவட்ட பிரதிநிதி பெருமாள், துணை செயலாளர் பாலு, முத்து, ஏழுமலை, உடனிருந்தனர்.

