/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடோனில் தீ விபத்து: ரூ.2 லட்சம் சேதம்
/
குடோனில் தீ விபத்து: ரூ.2 லட்சம் சேதம்
ADDED : அக் 26, 2024 07:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
கச்சிராயபாளையம், வாணியர் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் முருகன், 45; சோப்பு, ஷாம்பு, பேஸ்ட் உள்ளிட்ட ஷாப் பொருட்கள் மொத்த விற்பனையாளர். இவர், நேற்று முன்தினம் மதியம் 1:00 மணியளவில், குடோனிற்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான சோப்பு, ஷாம்பு, பேஸ்ட் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமாகியிருப்பது தெரியவந்தது. தீ பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை.
இது குறித்த புகாரின்பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.