/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் நகரில் கொடிக் கம்பங்கள் அகற்றம்
/
திருக்கோவிலுார் நகரில் கொடிக் கம்பங்கள் அகற்றம்
ADDED : ஏப் 21, 2025 10:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார், ; திருக்கோவிலுார் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்த கட்சி கொடிக் கம்பங்களை நகராட்சி நிர்வாகம் இடித்து அகற்றியது.
பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் கொடிக் கம்பங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, திருக்கோவிலுரர் நகராட்சி கமிஷனர் திவ்யா உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி பாதுகாப்பு பணியில் ஈடுபட நகராட்சி ஊழியர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் ஜே.சி.பி., மூலம் பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பங்களை இடித்து அகற்றினர்.