sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உதவி ஆணையர் அலுவலக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

/

உதவி ஆணையர் அலுவலக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

உதவி ஆணையர் அலுவலக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

உதவி ஆணையர் அலுவலக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா


ADDED : பிப் 18, 2024 12:24 AM

Google News

ADDED : பிப் 18, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

முதல்வர் ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 43 திட்டப் பணிகளுக்கு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். அதில், கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகரில் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் அலுவலகம் கட்டுவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டது.

இதையொட்டி கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவாகரன் தலைமை தாங்கினார். ஆய்வாளர் சத்தியவாணி முன்னிலை வகித்தார். முதல்வர் பணிகளை தொடங்கி வைத்ததையடுத்து, கட்டுமானப் பணிகளைத் தொடங்க பூமிபூஜை நடத்தி, அடிக்கல் நாட்டப்பட்டது.

நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ரகுவர ராஜ்குமார், தனி தாசில்தார் மனோஜ் முனியன், அர்த்தநாரீஸ்வரர் கோவில் தனி அறங்காவலர் சிங்காரவேல் உட்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் 3.56 கோடி ரூபாய் மதிப்பிலும், பரிக்கல் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் 2.20 கோடி ரூபாய் மதிப்பிலும் திருப்பணிகள் துவங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us