ADDED : ஜன 19, 2026 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவ மையம் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் டி.எம்., பள்ளியில் நடந்தது.
ரோட்டரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். ரோட்டரி முன்னாள் துணை ஆளுனர்கள் முத்துக்கருப்பன், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். செயலாளர் மோகன்தாஸ் வரவேற்றார்.
சங்கராபுரம் பல் டாக்டர் சிவரஞ்சனி முகாமினை துவக்கி வைத்தார்.
கோவை சங்கரா கண் மருத்துவ மைய டாக்டர்கள் கலந்துகொண்டு 135 நபர்களுக்கு, கண் பரிசோதனை செய்தனர். இதில் 41 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு கோவை அழைத்து செல்லப்பட்டனர்.
முகாமில் ரோட்டரி முன்னாள் தலைவர்கள் ஆறுமுகம், சீனிவாசன், சு தாகர், சவுந்தர், மூர்த்தி, நடராஜன், அசோக்குமார் பங்கேற்றனர். பொருளாளர் முனுசா மி நன்றி கூறினார்.

