/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 25, 2025 10:33 PM
சங்கராபுரம், ; சங்கராபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
விநாயகர் சதுர்த்தி குழு ஒருங்கிணைப்பாளர் பப்லு தலைமை தாங்கினார். அறங்காவலர் பாலசுப்ரமணியன், வழக்கறிஞர் தாமரைச்செல்வன், வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர்கள் சிகாமணி, பிரகாசம், பழனி, சக்கரவர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாராயணன் முன்னிலை வகித்தனர். பாலமுருகன் வரவேற்றார்.
கூட்டத்தில், வரும் ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சங்கராபுரம் நகரில் 10 இடங்களில் விநாயகர் சிலை வைப்பது, தொடர்ந்து 31ம் தேதி விநாயகர் விஜர்சன ஊர்வலம் நடத்துவது, விநாயகர் சிலை வைப்பதற்கு உரிய அனுமதி பெறுதல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரூராட்சி கவுன்சிலர்கள் சேகர், சிவக்குமார், கவிதாகிருபா, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் அன்பழகன், அன்பு மற்றும் ஹரி உட்பட பலர் பங்கேற்றனர்.