sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

எரிவாயு நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

/

எரிவாயு நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

எரிவாயு நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

எரிவாயு நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்


ADDED : மே 10, 2025 12:53 AM

Google News

ADDED : மே 10, 2025 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடந்தது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் சரவணன், நளினி முன்னிலை வகித்தனர்.

நுகர்வோர் அமைப்பினர் சுப்ரமணியன், மோகன், மணி, சம்பத் உள்ளிட்டோர், பங்கேற்றனர். இண்டேன் காஸ் நிறுவன மாவட்ட வணிக மேலாளர் சுந்தர், எரிவாயு முகவர்கள், பெட்ரோல் பங்க் முகவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வீட்டு உபயோக சிலிண்டர்களை கடைகளில் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். பெட்ரோல் பங்க்குகளில் தாசில்தார்கள், மண்டல மேலாளர்கள், எடை ஆய்வாளர் ஆகியோருடன் இணைந்து பெட்ரோல், டீசல் அளவு, தரம் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.

பெட்ரோல் பங்குகளில் கடைசியான ஆய்வு மற்றும் அளவு சான்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், நுகர்வோர் சார்பில் தெரிவிக்கப்பட்டன.

இந்த பிரச்னைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தாசில்தார்களுக்கு உத்தரவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us