/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுமி கர்ப்பம்; வாலிபருக்கு வலை
/
சிறுமி கர்ப்பம்; வாலிபருக்கு வலை
ADDED : டிச 10, 2024 07:12 AM
விருத்தாசலம்; சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில், வாலிபர் மீது போக்சோ வழக்குப் பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சோமாசிபாளையத்தை சேர்ந்தவர் அங்கப்பன் மகன் அரசு, 20. இவர், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி, நெருங்கி பழகியுள்ளார். இருவரது வீட்டிற்கும் தெரியாமல் கடத்திச் சென்று, திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கர்ப்பமடைந்த மாணவி, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தபோது, திருமண வயதை கடக்காமல் கர்ப்பமானது தெரிந்தது. இது தொடர்பாக மருத்துவமனை தகவலின் பேரில், பாதிக்கப்பட்ட சிறுமி புகாரின்படி, விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, அங்கப்பன் மகன் அரசுவை தேடி வருகின்றனர்.