sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு

/

நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு

நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு

நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு


ADDED : அக் 16, 2024 09:24 PM

Google News

ADDED : அக் 16, 2024 09:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சு.ஒகையூர் காட்டுகொட்டாய் பகுதியில் நாய்கள் கடித்து 3 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.

கள்ளக்குறிச்சி தாலுகா, சு.ஒகையூர் காட்டுகொட்டாயை சேர்ந்தவர் பூங்காவனம் மகன் பஞ்சன்,50; கூலித்தொழிலாளி. இவர் பட்டி அமைத்து, 30க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆடுகளை பட்டியில் வழக்கம்போல் கட்டி விட்டு பஞ்சன் வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து நேற்று காலை 10 மணியளவில் ஆடுகளுக்கு தண்ணீர் வைப்பதற்காக பட்டிக்கு சென்றுள்ளார். அங்கு இரத்த காயங்களுடன் 3 ஆடுகள் இறந்திருப்பதை கண்டு பஞ்சன் அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, இறந்த ஆடுகளின் உடல்களை பார்த்த போது நாய்கள் கடித்து குதறியது தெரிந்தது.

சு.ஒகையூர் கிராமத்தில் சுற்றித்திரியும் நாய்கள் இரவு நேரங்களில் கால்நடைகளை கடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடப்பதாகவும், நாய்களை பிடித்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us