/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தாயுமானவர் திட்டத்தின் கீழ் நாளை பொருட்கள் விநியோகம்
/
தாயுமானவர் திட்டத்தின் கீழ் நாளை பொருட்கள் விநியோகம்
தாயுமானவர் திட்டத்தின் கீழ் நாளை பொருட்கள் விநியோகம்
தாயுமானவர் திட்டத்தின் கீழ் நாளை பொருட்கள் விநியோகம்
ADDED : மார் 01, 2026 04:52 AM
கள்ளக்குறிச்சி: தாயுமானவர் திட்டத்தின் கீழ் நாளை மார்ச் 2 மற்றும் 3ம் தேதி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயது மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று பொது விநியோக திட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த 28,256 பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்படி, மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வரும் 2 மற்றும் 3ம் தேதி வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி, பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

