/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
/
அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
ADDED : பிப் 15, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டை அடுத்த உளுந்தாண்டார்கோவில் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் சிவானந்தராஜா,54. இவர் நன்னடத்தை விதிமீறலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதிமணி விசாரணை செய்தார்.
அதில், நன்னடத்தை விதிமீறலில் ஈடுபட்டது உறுதியானது.
அதனையொட்டி, தலைமை ஆசிரியர் சிவானந்தராஜாவை 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதிமணி உத்தரவிட்டார்.

