sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஓய்வின் போது பணப்பலன்கள் வழங்காத அரசு: சிவகாமி சாடல்

/

ஓய்வின் போது பணப்பலன்கள் வழங்காத அரசு: சிவகாமி சாடல்

ஓய்வின் போது பணப்பலன்கள் வழங்காத அரசு: சிவகாமி சாடல்

ஓய்வின் போது பணப்பலன்கள் வழங்காத அரசு: சிவகாமி சாடல்


ADDED : அக் 09, 2024 01:42 AM

Google News

ADDED : அக் 09, 2024 01:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி:'தமிழகத்தில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்காத திராவிட மாடல் ஆட்சி இல்லாமல் இருப்பதே மேல்' என, சிவகாமி ஐ.ஏ.எஸ்., கூறினார்.

கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக எஸ்.சி., - எஸ்.டி., தொழிலாளர்கள் தொழிற்சங்க பேரவை சார்பில், ஊதிய ஒப்பந்த கோரிக்கை குறித்த கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் கவுரவ தலைவர் சிவகாமி, சங்க கொடியேற்றி, பெயர் பலகை திறந்து வைத்தார்.

பின், அவர் கூறியதாவது;

தமிழகத்தில் அனைத்து அரசு போக்குவரத்து கழக பணிமனைகளிலும் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. பழுதடைந்த பஸ்கள், பட்டியலின தொழிலாளர்களுக்கும், புதிய பஸ்கள் மாற்று சமூக தொழிலாளர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

அனைத்து அரசு துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் போதும், அவர்களுக்கான பணப்பலன்கள் உடனடியாக வழங்கப்படுகிறது. ஆனால் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு, பல ஆண்டுகளாக நிலுவைத் தொகை வழங்கப்படாத அவலம் நீடிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us