ADDED : செப் 17, 2025 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே காணாமல் போன பேத்தியை கண்டுபிடித்து தரக்கோரி தாத்தா போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த வாணவரெட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகள் பரமேஸ்வரி,17; கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பரமேஸ்வரி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்காததால், மாயமான தனது பேத்தி பரேமஸ்வரியை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது தாத்தா சுப்ரமணியன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.