ADDED : ஏப் 09, 2025 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே, கிராவல் கடத்தியவரை போலீசார் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி தாலுகா, கூத்தக்குடி வி.ஏ.ஓ., வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் நேற்று காலை 10:00 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அண்ணாநகர் பஸ்நிறுத்தம் வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர்.
கூத்தக்குடியை சேர்ந்த செங்கமலம் மகன் மணிகண்டன்,39; என்பவர் அரசு அனுமதியின்றி ஒரு யூனிட் கிராவல் மண் கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து வி.ஏ.ஓ., வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், மணிகண்டனை வரஞ்சரம் போலீசார் கைது செய்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

