/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குறைகேட்புக் கூட்டம் 547 மனுக்கள் குவிந்தன
/
குறைகேட்புக் கூட்டம் 547 மனுக்கள் குவிந்தன
ADDED : மார் 18, 2025 04:09 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், 547 மனுக்கள் குவிந்தன.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். நில அளவை, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, உதவித் தொகை, மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக 547 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வைத்திறன் குறைபாடுடைய பள்ளி மாணவர்களுக்கு தலா 10 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பில் 4 பேருக்கு நவீன வாசிக்கும் கருவிகள் வழங்கப்பட்டது.
டி.ஆர்.ஓ., ஜீவா உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.