/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எஸ்.பி., அலுவலகத்தில் குறைகேட்புக் கூட்டம்
/
எஸ்.பி., அலுவலகத்தில் குறைகேட்புக் கூட்டம்
ADDED : ஜூலை 10, 2025 02:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், 34 மனுக்கள் பெறப்பட்டன.
போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கையில் திருப்தி பெறாத புகார்தாரர்களுக்கான குறைகேட்புக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
எஸ்.பி., ரஜத் சதுர்வேதி தலைமை தாங்கி, மனுக்களை பெற்றார். 46 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி.,க்கள் சரவணன், திருமால், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.