/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரேஷன் கார்டுதாரர்களுக்கு இன்று குறைதீர் முகாம்
/
ரேஷன் கார்டுதாரர்களுக்கு இன்று குறைதீர் முகாம்
ADDED : ஜன 24, 2025 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்:வாணாபுரம் தாலுகா அலுவலக செய்திக்குறிப்பு: வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு குறைதீர் சிறப்பு முகாம் நாளை (25ம் தேதி) நடக்கிறது.
முகாமில், ரேஷன் கார்டில் புதிதாக உறுப்பினரை சேர்த்தல், பெயர் நீக்குதல், மொபைல் போன் எண் இணைத்தல், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.