நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் பணியாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது.
இது குறித்து மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் விடுத்த செய்திக்குறிப்பு :
பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டம் இன்று கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடக்கிறது.
கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து நிலை பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் தங்களது பணி தொடர்பான குறைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம்.
மேலும், பணியின் போதும், வேறு வகையிலும் ஏற்படும் குறைகள் தொடர்பாகவும் மனு அளிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.