ADDED : ஜூன் 09, 2025 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் வள்ளலார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோதண்டபாணி, 70; இவரது பெட்டிக் கடையில் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.
இதனையடுத்து 2 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து கோதண்டபாணியை கைது செய்தனர்.