ADDED : மே 26, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம், : பகண்டை கூட்ரோடு அருகே, மளிகை கடையில் விற்பனைக்காக ஹான்ஸ் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் சேட்டு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, இளையனார்குப்பம் கிராமத்தை சேர்ந்த மன்னார் மகன் அருள்,38; என்பவர் தனது மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்து, கடையில் இருந்த ரூ.280 மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.