sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் 439 பேர் ஆஜர் விசாரணை செப்., 19 க்கு ஒத்தி வைப்பு

/

கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் 439 பேர் ஆஜர் விசாரணை செப்., 19 க்கு ஒத்தி வைப்பு

கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் 439 பேர் ஆஜர் விசாரணை செப்., 19 க்கு ஒத்தி வைப்பு

கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் 439 பேர் ஆஜர் விசாரணை செப்., 19 க்கு ஒத்தி வைப்பு


ADDED : ஜூலை 20, 2025 07:44 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சசி: கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் தொடர்புடைய 439 பேர் நேற்று கோர்ட்டில் ஆஜராகினர். வழக்கு விசாரணை செப்., 19ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். மாணவி இறப்புக்கு நியாயம் கேட்டு ஜூலை 17ல் நடந்த போராட்டம், பெரும் கலவரமாக மாறியது. இவ்வழக்கினை சிறப்பு புலனாய்வு குழு டி.எஸ்.பி., அம்மாதுரை மேற்பார்வையிலான போலீசார் விசாரித்தனர்.

இதில் பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி சூறையாடியது, போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தது, பசுமாடுகளை துன்புறுத்தியது, சின்னசேலத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசாரை கல்வீசி தாக்கியது என மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்தனர். கலவரம் தொடர்பாக 916 பேர் மீது வழக்கு பதிந்து, அதில் 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்திய வழக்கில் மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி உட்பட 615 பேர் மீது வழக்கு பதிந்து, 24 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதில் 3 பேர் உயிரிழந்து விட்டனர். இவ்வழக்கு விசாரணை கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. 439 பேர் ஆஜராகினர்.

வெளிநாட்டில் உள்ள 7 பேர் உட்பட 173 பேர் ஆஜராகவில்லை. வழக்கினை விசாரித்த நீதிபதி ரீனா விசாரணையை வரும் செப்., 19ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us